Home இலங்கை காணாமல் போன மகனை தேடியலைந்த மற்றுமொரு தாய் மாரடைப்பால் மரணம்:

காணாமல் போன மகனை தேடியலைந்த மற்றுமொரு தாய் மாரடைப்பால் மரணம்:

by admin

காணாமல் போன மகனை தேடியலைந்த மற்றுமொரு தாய் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த மற்றொரு தாயார் மாரடைப்பால் காலமானார். இலங்கை தனது மகனை கடற்படையினரிடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவரை தேடி வந்த தாய் ஒருவர் இன்றைய தினம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.  இவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி நடத்தப்படுகின்ற அனைத்துப் தொடர் போராட்டங்களிலும் பங்கெடுத்து வந்தார்.  இவ்வாறு உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியை சேர்ந்த செபமாலைமுத்து திரேசம்மா எனத் தெரிவிக்கப்பட்டள்ளது. தனது மகனான செபமாலைமுத்து ஜெபபிரகாஸ் என்பவரை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து தேடி போராட்டம் நடத்திவந்த என்பது குறிப்பிடத்தக்கது. #காணாமல் போன  #மகனை #தாய் #மாரடைப்பால்  #மரணம்  #முல்லைத்தீவு

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More