Home இலங்கை கரவெட்டி செட்டிததுறை வீதிக்கு ஊடகவியலாளரின் பெயரை சூட்ட கோரிக்கை ….

கரவெட்டி செட்டிததுறை வீதிக்கு ஊடகவியலாளரின் பெயரை சூட்ட கோரிக்கை ….

by admin


கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட செட்டிததுறை வீதிக்கு சிரேஷ் தமிழ் ஊடகவியலாளரான அமரர் ஐயாத்துரை நடேசனின் பெயரை சூட்டுமாறு கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு 8 ஆம்மாதம் 26 ஆம் திகதி அரச வர்த்தகமாணி வெளியீட்டில் 8ம் வட்டாரமும் நெல்லியடிக் கிராம அலுவலர் பிரிவு ஜே./376 இல் ஏழாவது வீதியாக செட்டித்துறை வீதி காணப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அமரர் ஐ.நடேசன் இறைவரித்திணைக்களத்தில் பணியாற்றியதுடன் நாடறிந்த சிரேஷ்ட ஊடகவியலாளராக பணியாற்றினார். அமரர் ஊடகவியலாளராக பணியாற்றிய நிலையில் 2014 ஆம்ஆண்டு 5 ஆம் மாதம் 31 ஆம் திகதி கிழக்கில் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்.

இவரது வரலாறு அடுத்ததலைமுறையினரும் அறிய வேண்டும் என்பதற்காகவும் அவரது சேவைக்கு மதிப்பளிக்கும் முகமாகவும் அவரின் பெயரை 250 மீற்றர் நீளமான மேற்படி வீதிக்கு சூட்டுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More