Home இலங்கை ஒட்டு மொத்த வீட்டு பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுத்தருவேன்

ஒட்டு மொத்த வீட்டு பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுத்தருவேன்

by admin


எதிர்வரும் நவம்பர் மாதத்தை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி, சரியான தீர்வை நீங்கள் எடுப்பீர்களாக இருந்தால் இந்த தீர்வு இலங்கை மக்களுக்கும்,உங்களுக்கும் சரியான தீர்மானமாக இருக்குமாக இருந்தால் நான் மீண்டும் வந்து மன்னாரில் மாத்திரமல்ல இலங்கையில் இருக்கக்கூடிய ஒட்டு மொத்த வீட்டு பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுத்தருவேன் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

-மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஜேசப்வாஸில் நிர்மாணிக்கப்பட்ட 239 ஆவது மாதிரி கிராமமான ஜோசப்வாஸ் நகர் மற்றும் 230 ஆவது மாதிரிக்கிராமமான ஜேசப் புரம் ஆகிய இரண்டு மதிரிக்கிராமங்கள் இன்று வியாழக்கிழமை(8) காலை 10 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது.

-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மேகன்ராஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,அமைச்சர் றிஸாட் பதியுதீனின் செயலாளர் றிப்கான் பதியுதீன்,மன்னார் பிரதேச சபையின் தலைவர் எம்.முஜாகிர்,ஐக்கிய தேசியக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஏ.எஸ்.எம்.பஸ்மி ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தனர். -அதனைத்தொடர்ந்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் சஜித் பிரேமதாச அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,

வீடமைப்பு அமைச்சினை நான் கடந்த 2015 ஆம் ஆண்டு பொறுப்பெடுத்தேன்.நான் அமைச்சினை பொறுப்பெடுபக்கும் போது ஏற்கனவே இருந்தவர்களுக்கு கூட தெரிந்திருக்க வில்லை இந்த நாட்டிலே எத்தனை நபர்களுக்கு வீடு தேவை என்பது.

-நான் அனைத்து அரிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்தேன்.இந்த நாட்டிலே காணப்படுகின்ற வீடுகளின் குறைபாடுகளை தயவாக எனக்கு சமர்ப்பிக்குமாறு கோரி இருந்தேன்.

-அதன் அடிப்படையில் 25 இலட்சம் வீடுகள் தேவைப்பவது தெரிய வந்துள்ளது.25 இலட்சம் குடும்பங்கள் வீடுகள் இல்லாமல் கஸ்டப்படுட்டுக் கொண்டிருந்தார்கள்.

-நாங்கள் உடனடியாக அடுத்த கட்டமாக ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தோம். -எதிர்கால நோக்கத்தோடு,எமது வேலைத்திட்டங்களை நாங்கள் வரிசைப்படுத்தியுள்ளோம்.

-முதல் கட்டமாக 2500 வீடுகளையும்,2 ஆம் கட்டமாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5 ஆயிரம் வீடுகளையும்,3 ஆம் கட்டமாக 10 ஆயிரம் வீடுகளையும் அமைக்க உள்ளோம்.

அதிலே முதல் கட்டமாக 8500 வீடுகளை இம்மாதம் செப்டெம்பர் மாதம் கட்டி முடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் திறமையான அதிகாரிகளின் சிறப்பான கடமையினால் செப்டெம்பர் மாதம் வரை கொண்டு செல்லாது யூலை மாதம் அந்மத வீடுகளை கட்டி முடித்து விட்டார்கள்.

எனவே நாங்கள் அடுத்த கட்டத்திற்குச் செல்ல இருக்கின்றோம்.இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள அனைத்து வீட்டுத்திட்டங்களையும் துரித கதியில் நிறைவுக்கு கொண்டு வர இருக்கின்றோம்.நவம்பர் மாதம் உங்கள் அனைவருக்கும் ஒரு சவாலான மாதமாக இருக்கின்றது.

நவம்பர் மாதத்தை நீங்கள் சரியான முறையில் பயண்படுத்தி,சரியான தீர்வை நீங்கள் எடுப்பீர்களாக இருந்தால் இந்த தீர்மானம் இலங்கை மக்களுக்கும்,உங்களுக்கும் சரியான தீர்மானமாக இருக்குமாக இருந்தால் நான் மீண்டும் வந்து மன்னாரில் மாத்திரமல்ல இலங்கையில் இருக்கக்கூடிய ஒட்டு மொத்த வீட்டு பிரச்சினைகளுக்கும் 2025 ஆம் ஆண்டிற்குள் 20 ஆயிரம் வீடுகளை நாடளாவிய ரீதியில் கட்டி முடிப்பேன்.

எந்த ஒரு நாடாக இருந்தாலும்,எந்த ஒரு பாரிய சேதம் ஏற்பட்டவுடன் உடனடியாக சேதம் ஏற்பட்ட இடங்களை மீள கட்டி எழுப்ப துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள்.சில நாடுகளில் யுத்தம் இடம் பெற்று வருகின்றது.யுத்தம் நடக்கும் போது பிரதேசங்கள்,நாடு ரீதியாக சேதம் ஏற்படும்.

யுத்தம் நிறைவடைந்து சமாதான காலம் ஏற்படும் போது சேதமடைந்த அந்த பகுதிகளை மீண்டும் நிர்மாணிப்பார்கள். அவ்வாறு நிர்மானப்பணிகளை மேற்கொள்ள ஒரு அமைப்பை உறுவாக்குவார்கள்.அந்த அமைப்பிற்கு சர்வதேச நிதி சம்மேளனம் என்று பெயர்.

அப்படியாக ஒரு அமைப்பை உறுவாக்கி அந்த அமைப்பின் ஊடாக சர்வதேச நாடுகளிடம் இருந்து நிதியை பெற்று சேதமடைந்த பகுதிகளை முற்று முழுதுமாக நிவர்த்தி செய்து முழுமையாக கட்டி எழுப்புவார்கள்.

நான் கூறுகின்றேன் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கையில் யுத்தம் முடிவடைந்தது.
-கிட்டத்தட்ட 10 வருடங்களை அண்மித்து விட்டோம்.இன்று வரை இப்படியான ஒரு சர்வதேச நிதி சம்மேளனத்தை இவர்கள் உருவாக்கினார்களா?? என்று கேட்டால் அப்படி ஒன்றும் இல்லை.

-நாட்டு மக்கள் மீது அக்கறை கொள்ளாது,நாட்டு மக்களின் பால் அக்கரை கொண்டு அபிவிருத்தியை மேற்கொள்ளாத,யுத்த காலத்தில் சேதமடைந்த பிரதேசங்களை கட்டி எழுப்பாதவர்கள் இப்போது மீண்டும் ஒரு முறை ஆட்சியை தட்டிப்பறிக்க முற்படுகின்றார்கள் எனத் தெரிவித்தார்.

-மேலும் குறித்த வீட்டு உரிமையாளர்களுக்கு உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டதோடு தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகள்,சுய தொழில் உபகரணங்கள்,கடன் திட்டத்திற்கான காசோலைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  #ஒட்டுமொத்த  #வீட்டுபிரச்சினை #சஜித் பிரேமதாச
லம்பேர்ட்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More