Home இலங்கை கோத்தாபய ராஜபக்ஸவை களமிறக்கியது பயங்கரமானது…

கோத்தாபய ராஜபக்ஸவை களமிறக்கியது பயங்கரமானது…

by admin

ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவை களமிறக்கியது பயங்கரமானது என, தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கோத்தாபயவுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், தான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்கப்போவதாக பசில் கூறியது பொய். ராஜபக்சர்கள் பேச்சை எவரும் நம்பப்போவதில்லை. எனவும் தெரிவித்தார்.

மேலும், காட்சியா? நாடா என்று வரும்போது ஸ்ரீ லாங்கா சுதந்திரக் கட்சியைவிட நாட்டுக்கே முன்னுரிமை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், கோத்தாபய ராஜபக்ஸவால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. ராஜபக்சர்கள் குடும்பத்திலிருந்து வேட்பாளரை தெரிவு செய்வதற்கு, அவர்களின் அதிகார பேராசையே காரணம். எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More