எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளதனால் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக தொடர்ந்தும் அங்கம் வகிக்க முடியாது என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று(15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவரது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் பதவி ரத்தாகும் போது நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது . #மகிந்த ராஜபக்ஸ #சுதந்திரக் கட்சி #உறுப்புரிமை #ரத்து
Spread the love
Add Comment