Home உலகம்ஓடர் செய்த உணவு வர தாமதமானதால் விடுதி ஊழியர் சுட்டுக்கொலை

ஓடர் செய்த உணவு வர தாமதமானதால் விடுதி ஊழியர் சுட்டுக்கொலை

by admin


விடுதியில் ஓடர் செய்த உணவு வர தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் ஒருவர் விடுதி ஊழியரை சுட்டுக்கொன்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் உள்ள மிஸ்ட்ரல் என்ற விடுதியிலேயே கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

உணவு வரத் தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் ஊழியரை அழைத்து, வாய் தகராறில் தர்க்கத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோபத்தின் எல்லைக்கு சென்ற அந்த வாடிக்கையாளர் துப்பாக்கியால் சுட்டதால் தோள்பட்டையில் காயமான 28 வயதான விடுதி ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துளார்.

இதனையடுத்து வாடிக்கையாளர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்ட நிலையில் அவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். ஓடர் செய்த உணவு வர தாமதமானதால் விடுதி ஊழியர் சுட்டுக்கொலை#ஓடர்  #உணவு ,#தாமதமானதால் #விடுதிஊழியர் #சுட்டுக்கொலை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More