உலகம் பிரதான செய்திகள்

அமேசன் காட்டுத்தீ – ஜி7 நாடுகளின் உதவி பிரேசிலால் நிராகரிப்பு

உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசன் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க 20 மில்லியன் டொலர் வழங்கப்படும் என ஜி7 நாடுகள் அறிவித்துள்ள நிலையில், பிரேசில் அதனை நிராகரித்துள்ளது.

அமேசனில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தொடர்ந்து பரவி வரும் இந்த காட்டுத்தீயால் உலக நாடுகள் பெரிதும் அச்சமடைந்துள்ளன.

அமேசன் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டில் இருந்தாலும், பொலிவியா, கொலம்பியா, வெனிசூலா உள்ளிட்ட வேறு 8 நாடுகளிலும் இந்த காடுகள் பரவியுள்ள நிலையில் இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவுமாறு உலக நாடுகளுக்கு கொலம்பியா அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதைத்தொடர்ந்து காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ ஜி-7 அமைப்பின் உறுப்பு நாடுகள் முன்வந்திருந்தன

பிரான்சின் பியாரிட்ஸ் நகரில் ஜி-7 மாநாடு நடந்து வரும் நிலையில், அதில் பங்கேற்றுள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அமேசான் காட்டுத்தீ குறித்து விவாதித்து இறுதியாக, அமேசன் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க 20 மில்லியன் டொலர் வழங்கப்படும் என ஜி7 நாடுகள் அறிவித்தது.

இந்தநஜலையில் இந்த அறிவிப்பை நிராகரித்துள்ள பிரேசில் மேலும் அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க ஜி7 நாடுகளின் உதவி தேவையில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளது.   #அமேசன் #காட்டுத்தீ #ஜி7 #உதவி #நிராகரிப்பு

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.