Home இந்தியா இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் வெளியானது

இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் வெளியானது

by admin

இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரோனிக் சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை இந்திய மத்திய அரசு நேற்றையதினம் வெளியிட்டுள்ளது

இ-சிகரெட் சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவைகட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டநிலையில், இந்த தடையை அமுல்படுத்தும் அவசர சட்டத்தை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது

அதில், இ-சிகரெட்டுகளை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி-இறக்குமதி செய்தல், சேமித்து வைத்தல், அனுப்புதல், விற்பனை செய்தல், விளம்பரம் செய்தல் ஆகியவை அபராதத்துடன் கூடிய தண்டனைக்குரிய குற்றம் என்று கூறப்பட்டுள்ளது.

முதல்முறை தவறு செய்பவர்களுக்கு ஓராண்டுவரை சிறைத் தண்டனை அல்லது 1 லட்சம ரூபா வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். அடுத்தடுத்து தவறு செய்பவர்களுக்கு 3 ஆண்டுவரை சிறைத் தண்டனை அல்லது 5 லட்சம் ரூபா வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.  #இ-சிகரெட் #தடை  #அவசரசட்டம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More