Home இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்காக, 3 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்…

ஜனாதிபதி தேர்தலுக்காக, 3 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்…

by admin


ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்ததை தொடர்ந்து, அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத் தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும், அன்றைய தினம் காலை 9 மணி முதல் 11 மணி வரையான காலப் பகுதியில் வேட்பாளர் மனுத் தாக்கல் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், வேட்பாளர் கட்டுப்பணம் நேற்று (19) முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை கையேற்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று 3 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2 சுயாதீன வேட்பாளர்களும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர் ஒருவரும் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜயந்த கெட்டகொட, சிறிபால அமரசிங்க ஆகியோர் சுயாதீன வேட்பாளர்களாகவும் இலங்கை சோசலிச கட்சி சார்பில் அஜந்தா பெரேராவும் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More