Home இலங்கை கல்முனைகுடியில் கஞ்சா பொதியுடன் நடமாடிய நால்வருக்கு விளக்கமறியல்

கல்முனைகுடியில் கஞ்சா பொதியுடன் நடமாடிய நால்வருக்கு விளக்கமறியல்

by admin

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டம்  கல்முனைப் காவல்துறை  பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கஞ்சா பொதியுடன்  கைதான நான்கு இளைஞர்களையும்  எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு   கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

 புதன்கிழமை(25) மாலை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கபெற்ற  இரகசியத் தகவல் ஒன்றை அடுத்து கல்முனைக்குடிப் பிரதேசத்தில் வசிக்கும்  பாறுக் முகமட் சிறாத் ஷாகிப் (வயது-26), முஹமட் றிஷாத் (வயது-28), அப்துல் கரீம் முஹமட் சுஜீர்(வயது-26), முஹமட் நவாஸ் (வயது-32), ஆகிய நான்கு இளைஞர்களும் கடற்கரை வீதியில் வைத்து  கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 21கிராம்,25 கிராம், 30 கிராம்,25கிராம் போன்ற நிறைகளுடன் கூடிய கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டதுடன்  கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர்கள் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது  விசாரணையில் தெரியவந்துள்ளது.

கல்முனை காவல் நிலைய உதவி  பொலிஸ் அத்தியட்சகர் சூரியபண்டாரவின் பணிந்துரைக்கமைய கைதானவர்களை கல்முனை உப பொலிஸ் பரிசோதகர் வை.அருணன், சாஜண்ட் ஏ.எல்.எம்.றவூப் , பொலிஸ் உத்தியோகஸ்தர் நவாஸ் ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வியாழக்கிழமை (26)காலை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவிட்டது.

அண்மைக் காலமாக குறித்த பகுதியில் அதிகளவான போதைப் பாவனை மற்றும் போதைப் பொருள் வியாபாரம் என்பன அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. மேலும் கடந்தவாரம் அதிகளவான நிறை கொண்ட கஞ்சாப் பொதிகளுடன்(10கிலோ) தாயும் மகளும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   #கல்முனை  #கஞ்சா #விளக்கமறியல்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More