Home இலங்கை கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க தாயார் கட்சியின் சின்னத்தை விட்டுக் கொடுக்க முடியாது…

கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க தாயார் கட்சியின் சின்னத்தை விட்டுக் கொடுக்க முடியாது…

by admin

நாட்டுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவளிப்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் சுதந்திர கட்சியின் தனித்துவத்தையும் கொள்கையையும் பாதிக்கும் வகையில் தாமரை மொட்டு சின்னத்தின் கீழ் அந்த ஆதரவை வழங்க தயார் இல்லை என ராஜபக்ஸக்களுக்கு தெளிவாகக் கூறிவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குருணாகலில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ, கோத்தாபய ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் என்னை சந்தித்து பொதுஜன பெரமுன – சுதந்திர கட்சி கூட்டணி தொடர்பில் கலந்துரையாடினார்கள். அதன் போது பரந்துபட்ட கூட்டணியாக கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க தாயார் என்றாலும், கட்சியின் சின்னத்தை விட்டுக் கொடுத்து ஆதரவளிக்க தயாரில்லை என்று தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் காணப்படும் பிரதான கட்சிகளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாத்திரமே மக்களின் பிரச்சினைகள் குறித்து சிந்தித்து செயற்படுகின்றது. எனவே கட்சியின் தனித்துவத்தை காட்டிக் கொடுத்து தாம் யாருக்கும் ஆதவளிக்கப் போவதில்லை. ஆனால் நவம்பர் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலின் பின் சுதந்திர கட்சி இன்றி இந்த நாட்டுக்கு அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More