Home இலங்கை எதிராளியை மிரட்டிய முறைப்பாட்டாளர் – நீதவான் கடும் எச்சரிக்கை…

எதிராளியை மிரட்டிய முறைப்பாட்டாளர் – நீதவான் கடும் எச்சரிக்கை…

by admin

யாழ்.நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் காசோலை மோசடி வழக்கில் எதிராளியை பொய் சாட்சியம் வழங்க வற்புற்றுத்தி மிரட்டிய முறைப்பாட்டளரை யாழ்.நீதவான் கடுமையாக எச்சரித்தார்.

யாழ்.நீதவான் நீதிமன்றில் காசோலை மோசடி வழக்கொன்று நடைபெற்று வருகின்றது. குறித்த வழக்கின் கடந்த தவணை விசாரணைகள் முடிவடைந்து வழக்குடன் தொடர்புடையவர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வந்த போது , வழக்கின் முறைப்பாட்டாளர் மூன்றாம் எதிரியிடம் தனிப்பட்ட ரீதியில் அனுகி தமக்கு சாதகமாக பொய் சாட்சியம் அளிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு எதிராளி மறுப்பு தெரிவித்து சென்றிருந்தார்.

பின்னர், அன்றைய தினம் மாலை கொக்குவில் பகுதியில் குறித்த மூன்றாம் எதிராளி தனது முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளை முறைப்பாட்டாளரின் சகாக்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அவரை வழிமறித்து மிரட்டி முறைப்பாட்டாளருக்கு சாதகமாக பொய் சாட்சியம் அளிக்குமாறு மிரட்டி சென்றனர்.  குறித்த மிரட்டல் சம்பவம் தொடர்பில் மூன்றாம் எதிராளி யாழ். காவல்  நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , எதிராளியின் சட்டத்தரணி , தமது கட்சிகாரர் மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

அதனை அடுத்து நீதவான் முறைப்பாட்டாளரிடம் இவ்வாறான செயற்பாடுகளில் இனி ஈடுபட கூடாது என கடுமையாக எச்சரித்ததுடன், இனி அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டால் வழக்கு நிறைவடையும் வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்படுவீர் என கடுமையாக எச்சரித்தார்.

அதனை தொடர்ந்து வழக்கை திகதியிட்டு ஒத்திவைத்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More