Home உலகம்ஜப்பானில் 500 ஆண்டுகள் பழமையான கோட்டையின் முக்கிய கட்டிங்கள் தீயினால் அழிவு

ஜப்பானில் 500 ஆண்டுகள் பழமையான கோட்டையின் முக்கிய கட்டிங்கள் தீயினால் அழிவு

by admin

ஜப்பானில், ஒக்கினவா தீவில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான ஷூரி என்ற கோட்டையின் 7 முக்கிய கட்டிடங்கள் எரிந்து அழிந்துள்ளது. முற்றிலும் மரப்பலகைகளால் கட்டமைக்கப்பட்ட இந்த கோட்டையானது, இரண்டாவது உலகப்போரின்போது முற்றிலும் அழிக்கப்பட்ட போதும் மறுபடியும் கட்டமைக்கப்பட்டு யுனஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்ந்து வந்தது.

இந்த கோட்டையில் நேற்றையதினம் திடீரென தீப்பிடித்ததனால் கோட்டையின் 7 முக்கிய கட்டிடங்கள் எரிந்து அழிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினர் 10 மணி நேரம் போராடி தீயை அணத்த போதிலும் அந்தக்கோட்டை உருக்குலைந்து போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  #ஜப்பான் #ஷூரி  #பழமையான #தீயினால்  #அழிவு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More