Home இலங்கை தேர்தல் பிரசார கூட்டத்தில் துப்பாக்கி சூடு – இருவர் பலி – ஒருவருக்கு மரணதண்டனை

தேர்தல் பிரசார கூட்டத்தில் துப்பாக்கி சூடு – இருவர் பலி – ஒருவருக்கு மரணதண்டனை

by admin


கட்டுவன ஹெடிவத்த பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்ட சிலர் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்தமை தொடர்பில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டில் கட்டுவன பகுதியை சேர்ந்த 50 வயதான எதிரிமானே மாலனி, 18 வயதான ஜயசேகர பத்திரன எனப்படும் ஹெசான் ஆகிய இருவர் உயிழந்திருந்தனர்.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் தொடர்பான வழக்கு விசாரணை நீண்ட காலமாக தங்கல்ல நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவந்த நிலையில் நேற்றைய தினம் (07) அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஜுலம்பிட்டி பகுதியை சேர்ந்த 49 வயதான ஜுலம்பிட்டி அமரே எனப்படும் கீகனகே அமரசிறி என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #தேர்தல்பிரசாரகூட்டம் #துப்பாக்கிசூடு  #மரணதண்டனை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More