Home இந்தியா கர்நாடகாவில் 17 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்தமை செல்லுபடியாகும்

கர்நாடகாவில் 17 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்தமை செல்லுபடியாகும்

by admin


கர்நாடகத்தில் 17 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது

கர்நாடகாவில் கொறடா உத்தரவை மீறியதாக 17 சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார்

கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்ததனால் காங்கிரஸ்-ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. குமாரசாமி முதலமைச்சராக பதவி ஏற்றதுடன் காங்கிரசுக்கு துணை முதலமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது.

14 மாதங்கள் குமாரசாமி ஆட்சி நடத்திய பின்னர் கூட்டணி கட்சிகளின் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென பதவிவிலகினர். அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 23ம் திகதி குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய நிலையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த பதவிவிலகியவாகள் உள்பட 17 சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையாகதமையினால் குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்தது. இதனையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எடியூரப்பா தலைமையில் புதிதாக பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்றது.

காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகளின் கொறடா உத்தரவை மீறியதாக 17 சட்டமன்ற உறுப்பின்hகள் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர்கள் அனைவரும் வருகிற 2023-ம் ஆண்டு வரை கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்துள்ளார்.

சபாநாயகரின் இந்த தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றில்; 17 பேரும் ரிட் மனு தாக்கல் செய்திருந்தனர். ;. அந்த மனு மீது 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் சுமார் ஒரு வாரம் விசாரணை நடைபெற்றது.

கடைசியாக கடந்த ஒக்டோபர் மாதம் 25-ந் திகதிp இறுதி விசாரணை நடைபெற்றதன் பிறகு தீர்ப்பை திகதிp குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் சட்டசபையில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் திகதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு தாமதமானால், தாங்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என அச்சமடைந்த தகுதி நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இடைத்தேர்தலை ஒத்திவைக்குமாறு உச்சநீதிமன்றில் ; கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், புதிய மனுவை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். அதன்படி தகுதி நீக்க சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனு மீது நவம்பர் 13-ந் திகதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்த நிலையில் 17 சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ள வழக்கில் நவம்பர் 13-ந் திகதி தீர்ப்பு வழங்கப்படும் எனஉ ச்சநீதிமன்றம் கடந்த 9-ந் திகதிp அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் 17 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் வருகிற இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  #கர்நாடகா #சட்டமன்றஉறுப்பினர்கள் #தகுதிநீக்கம்  #சபாநாயகர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More