Home இலங்கை அனைத்து மக்களும் இன்று சுபீட்சமும் ஒழுக்கப் பண்பாடுமிக்க நாடு குறித்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்…

அனைத்து மக்களும் இன்று சுபீட்சமும் ஒழுக்கப் பண்பாடுமிக்க நாடு குறித்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்…

by admin


அனைத்து மக்களும் இன்று சுபீட்சமும் ஒழுக்கப் பண்பாடுமிக்க நாடு குறித்த எதிர்பார்ப்புடன் இருப்பதாக சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர் தெரிவிப்பு..….

கி.பி 309 முதல் 322 வரை ஆட்சியில் இருந்த கோட்டாபய மன்னருக்குப் பின்னர் மீண்டும் ஒரு கோட்டாபய நாட்டுக்கு கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில், அவர் சமய ரீதியாகவும் சட்டத்தை மதித்தும் நாட்டை ஆட்சி செய்து சுபீட்சமும் ஒழுக்கப் பண்பாடுமிக்க ஒரு நாட்டை கட்டியெழுப்புவார் என நாட்டிலுள்ள அனைத்து மக்களும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக கலாநிதி சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர் தெரிவித்தார்.

மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (24) பிற்பகல் கொட்டாவ, ருக்மலே தர்ம விஜயாலோக்க விகாரையில் கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ஸ்ரீ தர்ம மகா சங்க சபையின் மகா நாயக்க தேரரும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தருமான சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். இதன்போது விசேட அனுசாசன உரையொன்றை நிகழ்த்தும்போதே சங்கைக்குரிய தேரர் அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாம ஸ்ரீ தர்ம மகா சங்க சபையின் அனுநாயக்க தேரர் பேராசிரியர் சங்கைக்குரிய கொட்டபிட்டியே ஸ்ரீ ராகுல அனுநாயக்க தேரரும் இங்கு வருகை தந்திருந்ததுடன், அரச நிறுவனங்களுக்கும் நிர்வாக நடவடிக்கைகளுக்கும் பொருத்தமானவர்களை ஆட்சேர்ப்பு செய்து அரச கட்டமைப்பை முறைப்படுத்தி அதன் உச்சபட்ச பெறுபேறுகளை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் நாட்டின் ஆட்சியாளர் என்ற வகையில் ஜனாதிபதி அவர்களின் தலையீட்டினை சங்கைக்குரிய தேரர் அவர்கள் நினைவுகூர்ந்தார்.

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாம ஸ்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாசங்கத்தினர் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்ததுடன், அவர்களும் ஜனாதிபதி அவர்களுக்கு தங்களது ஆசிர்வாதங்களை தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மொஹான் எல்.கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
24/11/2019 – 01

நாட்டை சரியான திசைக்கு கொண்டுவரும் முதல் எட்டில் மக்கள் வெற்றிபெற்றுள்ளதாக சங்கைக்குரிய பெல்லன்வில தம்மரத்தன நாயக்க தேரர் தெரிவிப்பு….

நாட்டை சரியான திசைக்கு கொண்டுவரும் முதல் எட்டில் மக்கள் வெற்றிபெற்றுள்ளதாக சங்கைக்குரிய பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய பெல்லன்வில தம்மரத்தன நாயக்க தேரர் தெரிவித்தார்.

சவால்களுக்கு பயப்படாத ஜனாதிபதி அவர்களுக்கு நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய ஆற்றல் உள்ளது என்று குறிப்பிட்ட தேரர் அவர்கள், அதற்காக பொறுமையுடன் ஜனாதிபதி அவர்களுக்கு காலத்தையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டுமென்று குறிப்பிட்டார்.

மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (24) பிற்பகல் பெல்லன்வில ரஜமகா விகாரைக்குச் சென்று விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய பெல்லன்வில தம்மரத்தன நாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். இதன்போது விசேட அனுசாசன உரையொன்றை நிகழ்த்தும்போதே தேரர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாரஹேன்பிட அபய ராமாதிபதி சங்கைக்குரிய முடுத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்ததுடன், அவர்களும் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி அவர்களை ஆசிர்வதித்தனர்.

இதேநேரம் ஜனாதிபதி அவர்கள் இன்று (24) பிற்பகல் பெபிலியான சுனேத்ராதேவி பிரிவெனா விகாரைக்குச் சென்று விகாராதிபதி பேராசிரியர் சங்கைக்குரிய மெதகொட அபயதிஸ்ஸ நாயக்க தேரரை சந்தித்தார்.

தேரர் அவர்களும் விசேட அனுசாசன உரையொன்றை நிகழ்த்தியதுடன், நாட்டில் மாற்றம் ஒன்றுக்காக எடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டினை பலப்படுத்துவதற்கு மகாசங்கத்தினரது முழுமையான ஒத்துழைப்பும் ஆசிர்வாதமும் கிடைக்குமென குறிப்பிட்டார்.

புலமை வாய்ந்தவர்களையும் துறை சார்ந்தவர்களையும் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமானால் அதற்கும் மகாசங்கத்தினரது முழுமையான ஒத்துழைப்பு உள்ளதென்றும் தேரர் அவர்கள் குறிப்பிட்டார்.

தேசிய புலமைத்துவ பிக்கு சங்கத்தின் தேரர்களும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்ததுடன், அவர்களும் ஜனாதிபதி அவர்களுக்கு தமது ஆசிர்வாதங்களை தெரிவித்தனர்.

மொஹான் எல்.கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
24/11/2019 – 02

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More