Home இலங்கை அரச நிறுவனங்களுக்கு திறமையும் தகைமையும் உள்ளவர்களை நியமிப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு குழு நியமனம் :

அரச நிறுவனங்களுக்கு திறமையும் தகைமையும் உள்ளவர்களை நியமிப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு குழு நியமனம் :

by admin

அரசாங்க நியதிச்சட்ட சபைகள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான வணிக நிறுவனங்களுக்கு திறமையும் தகைமையும் கொண்டவர்களை நியமிப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி அலுவலகம் ஆறு தொழில் வல்லுநர்களை கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது.

முன்னாள் அமைச்சரவையின் செயலாளரும் அரச துறை பற்றிய விரிவான அனுபவங்களைக் கொண்டவருமான சிரேஷ்ட அரச அதிகாரி சுமித் அபேசிங்கவின் தலைமையிலான இக்குழுவில் பிரசன்ன ரத்நாயக்க, கலாநிதி நாலக்க கொடஹேவா, டயன் கோமஸ், கலாநிதி பிரசன்ன குணசேன மற்றும் பேராசிரியர் ஜகத் வெல்லவத்த ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

தகைமை வாய்ந்த தொழில் வல்லுநர்கள் தொடர்பான பரிந்துரையை 2019 டிசம்பர் 18ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் இக்குழுவிற்கு அறிவித்துள்ளது.   #அரச  #திறமை #தகைமை,  #பரிந்துரை #நியமனம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More