Home இலங்கை இரண்டரை வயது பாலகன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

இரண்டரை வயது பாலகன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

by admin

இரண்டரை வயது பாலகன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.  இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் துன்னாலை குடவத்தைப் பகுதியில் இடம்பெற்றது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். தந்தையார் இரவு கடமைக்காக சென்றிருந்த நிலையில் தாயாருடன் பாலகன் உறங்கியுள்ளநிலையில் பாலகனை நேற்றிரவு 11.30 மணி முதல் காணவில்லை என்று தாயார் காவல்துறையில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இன்று காலை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பாலகனின் சடலம் மந்திகை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்று விசாரணையின் பின்னரே உண்மை துலங்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நெல்லியடி காவல்துறையினர், தந்தையையும் தாயாரையும்  காவல்  நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர்.#பாலகன்   #கிணற்றிலிருந்து #மீட்பு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More