Home இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான இருவருக்கு பிணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான இருவருக்கு பிணை

by admin
பாறுக் ஷிஹான்
 

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட  63 பேர் செவ்வாய்க்கிழமை(31) மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றில்  முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இவர்களுள் 61 பேரை தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு   மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஸ்வான் உத்தரவிட்டார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இருவருக்கு இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டதுடன் ஏலவே  ஒருவரது வழக்கு மேலதிக விசாரணைக்காக கொழும்பிற்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் மாதம்    குறித்த குண்டு தாக்குதலை ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாத அமைப்பின் சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதிகள் மேற்கொண்ட பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் சஹரானின் ஊரான காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 64 பேரை சஹ்ரானின் அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா பயிற்சி முகாமில் பயிற்றி பெற்ற மற்றும் அந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட 64 பேரில் ஒருவருக்கு கடந்த தவணைகளில்   மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.  சந்தேகத்தின் பேரில் கைதானோருக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  #உயிர்த்தஞாயிறு   #பிணை #சஹ்ரான்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More