Home இந்தியா சிஏஏவுக்கு எதிராக முதன்முதலாக கேரளாவில் தீர்மானம்

சிஏஏவுக்கு எதிராக முதன்முதலாக கேரளாவில் தீர்மானம்

by admin

சிஏஏவுக்கு எதிராகக் கேரள சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் கேரளாவிலும் சிஏஏவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. முதல்வர் பினராயி விஜயனும், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் ஒரே மேடையில் சிஏஏவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக நோர்வே நாட்டுப்பெண்ணை மத்திய அரசு கொச்சியிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்தது.

கேரளாவில் இதுபோன்று சிஏஏவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், சிறப்புச் சட்டமன்றத்தைக் கூட்டி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என கேரள அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை ஆரம்பமான இந்த கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெறக் கோரும் தீர்மானத்தை, கேரள முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்துள்ள நிலையில் அந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த சட்டம் மதச்சார்பின்மைக்கும், நாட்டின் கூட்டமைக்கும் எதிரானது. இச்சட்டம் மூலம் மத ரீதியான வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இச்சட்டம் அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைக்கும் எதிரானது. இதனை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என அங்கு உரையாற்றிய பினராயி விஜயன், தெரிவித்துள்ளார்.

சிஏஏவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்த முதல் மாநிலம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.  #சிஏஏ #கேரளா  #தீர்மானம் #பினராயிவிஜயன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More