Home இலங்கை 4 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய வைத்தியர் கைது

4 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய வைத்தியர் கைது

by admin
பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டம்   உஹண  கோணாகொல்ல பகுதியில்  உள்ள சேனரத்புர பிராந்திய மருத்துவமனையில் கடமையாற்றும்  மருத்துவர் ஒருவர் நான்கு பாடசாலை  மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த  குற்றச்சாட்டில்   உஹன  காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

உஹண பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றின் மாணவிகள்  நால்வர் செவ்வாய்க்கிழமை(7)  இடம்பெறவிருந்த ஒரு  போட்டியில் கலந்துகொள்வதற்காக மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்காக சென்றுள்ளனர். குறித்த  விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க  சென்ற நான்கு சிறுமிகளே இவ்வாறு மருத்துவரினால்  துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட  சிறுமிகள் சக    மாணவர்களிடம் தெரிவித்த பின்னர்  வகுப்பாசிரியரின் கவனத்திற்கு  கொண்டு சென்றனர். இதனை அடுத்து   மருத்துவச் சான்றிதழ் வழங்குவது எனும் போர்வையில் துஷ்பிரயோகம் செய்யும் வகையில் நடந்துகொண்ட வைத்தியர்  கைது செய்யப்பட்டதாக உஹன காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட 18, 17,  14 வயதுடைய 04 சிறுமிகள் முறைப்பாடு வழங்கியதை அடுத்து    காவல்துறையினர் உடனடியாக  மருத்துவரை கைது செய்து தடுப்பு  காவலில் வைத்து  விசாரித்த நிலையில் குறித்த  மருத்துவரை அம்பாறை  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த  நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்ட  மருத்துவரை  எதிர்த்து அப்பகுதியில் வசிப்பவர்கள் மருத்துவமனையில் ஒன்று கூடியமையினால்  அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை,  பாதிக்கப்பட்ட  மாணவிகள்  வைத்திய பரிசோதனைகளுக்காக  அம்பாறை பெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  #சிறுமிகள் #துஷ்பிரயோகம்  #வைத்தியர் #கைது #அம்பாறை

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More