Home இலங்கை வட மாகாண ஆளுநர் யாழ். ஆயரைச் சந்தித்தார்…

வட மாகாண ஆளுநர் யாழ். ஆயரைச் சந்தித்தார்…

by admin

வட மாகாணத்தின் புதிய ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் யாழ். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். புதிய ஆளுநராக கடந்த வாரம் கடமைகளைப் பொறுப்பேற்ற ஆளுநர், இன்று (புதன்கிழமை) தனது பணிகளை ஆரம்பிப்பதற்காக, ஆயரிடம் ஆசி பெற்றுக்கொள்ளும் வகையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆயருடன் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், பி.எஸ்.எம்.சாள்ஸ் அண்மையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில் அவர் கடந்த 2ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More