Home இலங்கை யாழ் பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள்  தங்கியிருக்கும்  வீட்டிலிருந்து வாள் மீட்பு

யாழ் பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள்  தங்கியிருக்கும்  வீட்டிலிருந்து வாள் மீட்பு

by admin


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் தங்கியிருக்கும் வீடொன்றிலிருந்து வாள் மீட்கப்பட்டுள்ளது. எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை என்று யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் இன்று காலை இடம்பெற்றது.

‘யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்கள் பலர் அந்த வீட்டில் தங்கியிலுள்ளனர். அந்த வீட்டின் மேற்தளத்தில் வாள் ஒன்று இருப்பதாக வீட்டு உரிமையாளரால் தகவல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் அந்த வாள் மீட்கப்பட்டது. எனினும் அதுபற்றித் தமக்குத் தெரியாது என அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் தெரிவித்தனர். விசாரணைகள் இடம்பெறுகின்றன’ என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை, வாள் மீட்கப்பட்ட வீட்டில் கடந்த ஆண்டு சிங்கள மாணவர்களுக்கு இடையே மோதல் இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.  #யாழ்பல்கலைக்கழக  #சிங்கள #மாணவர்கள்  #வாள் #மீட்பு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More