Home இலங்கை இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் …

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் …

by admin

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு யாழ் பல்கலைக்கழக பொறியியல்பீட பீடாதிபதி A.அற்புதராஜா தலைமையில் இடம்பெற்றது.

30 மில்லியன் இலங்கை ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சியில் அமைந்துள்ள பொறியியல் பீட வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு நோர்வே பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து கடந்த 2017ம் ஆண்டு முதல் மேற்கொண்டு வந்த ஆராய்ச்சி நடவடிக்கைகளின் விளைவாக இந்த மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள நோர்வே தூதரகத்தின் அனுசரணையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட குறித்த மிகத்தும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் 42 கிலோ வோற்றுக்கு அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த நிலையத்தினை இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரைன் ஜெரான்லி எஸ்கெடால்  காலை 11.45 மணியளவில் திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் மேற்கு நோர்வே பல்கலைக்கழக விரிவுரையாளர் தயாளன் வேலாயுதபிள்ளை, யாழ் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி, யாழ் பொறியியல்பீட பீடாதிபதி A.அற்புதராஜா தூதரக அதிகாரிகள், அனுசரணையாளர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது குறித்த மின் உற்பத்தி நிலையத்தினை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், நோர்வே மற்றும் யாழ் பல்கலைக்கழகம் சார்பில் இரு தரப்பினரும் ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டமை குறிப்பிடதக்கதாகும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More