அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் தனக்கு உத்தரவு பிறப்பிக்க சட்ட பூர்வமாக எந்தவொரு அதிகாரமும் இல்லையென சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார். குறித்த ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலமாக இன்று (28) அவர் இதனை அறிவித்துள்ளார்.
ஆணைக்குழு விசாரணைகள் நிறைவடையும் வரை அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் டி.கே.பி. தசநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்குமாறு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். அந்த ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு நேற்று (27) இது தொடர்பான அறிவித்தலை முன்வைத்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love
Add Comment