Home இலங்கை யாழ் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா 12 கோடி நிதி

யாழ் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா 12 கோடி நிதி

by admin

யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா 11 கோடி 83 லட்சம் நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவின் அலையன்ஸ் ஏர் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் சென்னைக்கு ஒரு விமான சேவையை தொடங்கியபோது, யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்கும் முதல் நிறுவனமாக மாறியது.  அதேவேளை இந்த மாதம் கொழும்பிலிருந்து பலாலிக்கு முதல் பயணிகள் விமான சேவையை ஆரம்பித்தது.

இந்தநிலையில் இந்த விமான நிலையத்தை மேம்படுத்த முன்வந்துள்ள இந்தியா இதற்காக 11 கோடியே 83 லட்சம் நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.  இந்த திட்டத்துக்கு இலங்கை அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் பலாலி விமான நிலையத்தை மேம்படுத்த விரைவில் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என இலங்கை அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின்படி, பலாலி விமான நிலையத்தில் முனையம் மாற்றியமைப்பு, மின்வினியோகங்கள், பயன்பாட்டு சேவைகள், போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும் என இலங்கை அறிவித்துள்ளது. இதன்காரணமாக வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் சமூக பொருளாதார நலன்கள் அதிகரிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.  #யாழ்விமானநிலையம்  #இந்தியா  #நிதி  #பலாலி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More