Home இலங்கை எருக்கலம் பிட்டி சந்திக் கடைத் தொகுதியில் தீ விபத்து-இரு கடைகள் முற்றாக எரிந்து நாசம்-

எருக்கலம் பிட்டி சந்திக் கடைத் தொகுதியில் தீ விபத்து-இரு கடைகள் முற்றாக எரிந்து நாசம்-

by admin

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி எருக்கலம் பிட்டி சந்தி 5 ஆம் கட்டை பகுதியில் உள்ள 5 கடைகளை கொண்ட கடைத்தொகுதியில் இன்று திங்கட்கிழமை (24.02.20) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக குறித்த கடைத்தொகுதியில் உள்ள இரு கடைகள் முற்றக எரிந்துள்ளதோடு, மூன்று கடைகள் தீயில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கடை உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தியதோடு,பேசாலை காவற்துறையினருக்கும் தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு சென்ற  காவற்துறையினர் பொது மக்களின் உதவியுடன் தீயை அனைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் போது இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு சென்று  தீயை அணைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தீ விபத்தின் காரணமாக குறித்த கடை தொகுதியில் அமைந்துள்ள இரு கடைகள் முற்றாக தீயில் எரிந்துள்ள நிலையில் ஏனைய மூன்று கடைகள் தீயில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.உணவகம் மற்றும் மின் உபகரணம் திருத்தும் நிலையம் ஆகிய இரு கடைகளே எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்துள்ளதாகவும்,  எருக்கலம் பிட்டி சந்தியில் இருந்து தலைமன்னார் வரையான தொலைத் தொடர்பு சேவைகள் பாதீப்படைந்துள்ளதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கடைகள் திட்டதிட்டு தீ வைக்கப்பட்டா? என்பது தொடர்பாக காவற்துறையின ர் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More