Home இலங்கை ஓமந்தை விபத்தில் சிக்குண்டவர்கள் வௌ்ளவத்தையை சேர்ந்தவர்கள்…

ஓமந்தை விபத்தில் சிக்குண்டவர்கள் வௌ்ளவத்தையை சேர்ந்தவர்கள்…

by admin

வவுனியா – ஓமந்தை – பன்றிக்கெய்தகுளம் ஏ 9 பிரதான வீதியில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் வௌ்ளவத்தை பகுதியை சேர்ந்தவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வௌ்ளவத்தை நோக்கி பயணித்த வேன் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதன்போது பேருந்தும் வேனும் தீ பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் வேனில் பயணித்த 5 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் வானின் ஓட்டுனர் வானில் சிக்குண்டு இருந்த நிலையில் இரு வாகனங்களுக்கும் தீப்பரவியதால் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 4 ஆண்களும் 1 பெண்ணும் உள்ளடங்குவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (23.02.20) இரவு 8.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் 20 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More