Home இந்தியா இலங்கையில் இருந்து பாக் ஜலசந்தி கடல் வழியாக இந்தியா வரை நீந்தி சென்ற வெளி நாட்டவர்…

இலங்கையில் இருந்து பாக் ஜலசந்தி கடல் வழியாக இந்தியா வரை நீந்தி சென்ற வெளி நாட்டவர்…

by admin
அமெரிக்காவைச் சேர்ந்த எடிஹ என்ற பெண்மணி   தலைமன்னார் முதல் தமிழகத்திலுள்ள தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10.15 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை புரிந்தார்.  பாக் ஜலசந்தி கடற்பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும்.
ராமேஸ்வரம் தீவும், அதனை தொடர்ந்துள்ள மணல் தீட்டுக்களான ஆதாம் பாலமும் பாக் ஜலச்ந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது.  இந்தியாவிலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும், ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதியும் கொண்ட கடற்பகுதியாகும்.
 சர்வதேச அளவில் பல்வேறு நீச்சல் போட்டியில் சாதனை படைத்த அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி எடிஹ (வயது-45) என்பவர் தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான சுமார் 30 கிலோ மீற்றர்  தொலைவுள்ள பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி கடப்பதற்காக கடந்த மாதம் டெல்லியில் உள்ள வெளியுறவுதுறை, பாதுகாப்புதுறை அமைச்சகங்கள் மற்றும் இலங்கை தூதரகத்திற்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பி இருந்தார்.
 இந்திய-இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து நேற்று புதன் கிழமை காலை 05 மணிக்கு இங்கிலாந்தை சார்ந்த ஆடம் மோஸ் என்பவருடன் சேர்ந்து எடிஹ  நீந்த ரேம்பித்தார்.
 12.05 மணியளவில் இலங்கை-இந்திய சர்வதேச எல்லைக்கு வந்தடைந்தார்கள். பிற்பகல் 03.15 மணியளவில் தனுஸ்கோடி அரிச்சல் முனை அருகே உள்ள முதலாம் தீடை அருகே வந்தனர்.
 இவர்களுக்கு உதவியாக இலங்கை கடற்படையின் ரோந்து படகு சர்வதேச எல்லை வரையிலும், இந்திய கடற்பகுதியில் கடலோர காவல் படையின் ஹொவர் கிராஃட் கப்பலும் பாதுகாப்பினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. #இலங்கை  #ஜலசந்தி  #இந்தியா   #வெளிநாட்டவர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More