Home இலங்கை பூநகரியைச் சேர்ந்த நால்வர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது…

பூநகரியைச் சேர்ந்த நால்வர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது…

by admin

உள்நாட்டுத் தயாரிப்பு குண்டுகளுக்கு பயன்படுத்தும் வெடிமருந்தை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பூநகரியைச் சேர்ந்த நால்வர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை, வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக வைத்து அவர்கள் நால்வரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நால்வரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

“இரகசியத் தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரும் முன்னெடுத்த தேடுதலில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து சி4 வெடிமருந்தின் வீரியத்துக்கும் குறைந்தளவான 856 கிராம் வெடிமருந்து கைப்பற்றப்பட்டன. அத்துடன், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் மூவரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு தடுப்புக் காவல் உத்தரவு பெறப்படும்” என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More