Home இலங்கை வடக்கில் கொரோனோ இல்லை

வடக்கில் கொரோனோ இல்லை

by admin

வடக்கில் கொரனா தொடர்பில் மக்கள் பீதியடைய வேண்டாம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்

இன்றையதினம் இத்தாலியிலிருந்து வருகை தந்த ஒருவரின் மனைவி தலைச்சுற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார் எனினும் வைத்தியசாலையில் இருந்தவர்கள் கொரோனோவாக இருக்கலாம் என்ற அச்சத்தில் பீதி அடைந்த போதிலும் மருத்துவ பரிசோதனையின் போது அவருக்கு அவ்வாறான எந்த ஒரு சான்றும்இல்லை என்பதை உறுதிபடுத்தப்பட்ட பின்னர் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.
எனினும் வடக்கில்  கொரோனோ தொற்றுவதற்குரிய சாத்தியங்கள் மிகக் குறைவு.  எனவே மக்கள் பீதியடைய தேவையில்லை.  கொரோனோ தொற்று உள்ள ஒருவருடன் நெருக்கமாக பழகும் ஒருவருக்கே ஒரு தொற்று ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எனவே வடக்கினை பொறுத்த வரைக்கும் அவ்வாறு இல்லை ஒருவருக்கு  கூட தொற்று ஏற்பட வில்லை . எனவே வடக்கு மக்கள்  கொரோனோ தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை.
தேவையற்ற விதத்தில் பொருட்களை கொள்வனவு செய்யவோ அல்லது பீதியடையவோ தேவையில்லை எனவே இது தொடர்பில் வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் போதியளவு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அவ்வாறு யாராவது இனங்காணப்பட்டால் அதற்குரிய சிகிச்சை அளிப்பதற்கு உரிய ஏற்பாடுகள் மத்திய அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே வடக்கு மக்கள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை எனவும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்  #வடக்கில்  #கொரோனோ  #சத்தியமூர்த்தி
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More