Home இலங்கை மன்னாரில் வெடிபொருட்களை தேடி அகழ்வு :

மன்னாரில் வெடிபொருட்களை தேடி அகழ்வு :

by admin

மன்னார்-தலை மன்னார் பிரதான வீதி,பேசாலை பிரதேசத்திற்கு உட்;பட்ட வியாயடிப் பண்ணை காட்டுப் பகுதியில் ஆயுதங்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்கு இடமான பொருட்கள புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலில் அடிப்படையில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இன்று வியாழக்கிழமை (12) மாலை குறித்த பகுதியில் அகழ்வு நடவடிக்கை இடம் பெற்றது.

மன்னார் உதவிக் காவல்துறை அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மன்னார் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று குறித்த பகுதியில் அகழ்வு நடவடிக்கை இடம் பெற்றது. இன்று வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் குறித்த காட்டுப்பகுதியில் அகழ்வுப்பணி இடம் பெற்றது.

இதன் போது மன்னார் உதவிக் காவலல்துறைஅத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி, பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமஜித், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உறட்பட வைத்தியர், கிராம சேவையாளர் ,உற்பட உரிய அதிகாரிகள் சமூகமளித்திருந்தனர். குறித்த அகழ்வின் போது எவ்வித சந்தேகப்பொருட்களும் மீட்கப்படவில்லை.

இந்த நிலையில் குறித்த அகழ்வுப்பணி நாளை வெள்ளிக்கிழமை மாலை 2 ஆவது நாளாக இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.  #மன்னார்   #வெடிபொருட்கள்   #அகழ்வு  #பேசாலை

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More