Home இலங்கைதமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்புமனுத்தாக்கல்  – ஊடகவியலாளர் கேள்விக்கு  க.வி.விக்னேஸ்வரனின் பதில்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்புமனுத்தாக்கல்  – ஊடகவியலாளர் கேள்விக்கு  க.வி.விக்னேஸ்வரனின் பதில்

by admin
கேள்வி –  இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் பெருவாரியாக வந்து உங்கள் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகின்றீர்களா? நீங்கள் மக்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்.

பதில் –
யார் உண்மையானவர்கள்இ யார் நேர்மையானவர்கள் என்பது எங்களுடைய மக்களுக்கு நன்கு தெரியும்.
ஆகவே எமது மக்களுக்கான அவ்வாறான நீதியின் குரல்கள் பாராளுமன்றத்தில் வெகு விரைவில் ஒலிக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை. அது உலகின் ஆன்மாவைத் தொடும் என்றும் நான் நம்புகின்றேன். நிச்சயம் உலகத்தின் சிந்தனைகள் மாறும். எமது மக்களுக்கான நீதி கிடைக்கும் என்பது என் மக்களுக்கு நான் கூறவிரும்புவது.

  தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்
1. நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் (முன்னாள்  முதலமைச்சர், வடமாகாணசபை)
2. திரு. ஆ.க.பிறேமச்சந்திரன் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)
3. சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)
4. திருமதி. அனந்தி சசிதரன் (முன்னாள் மகளிர் அமைச்சர் வடமாகாணசபை)
5. திரு. க.அருந்தபாலன் (ஓய்வுநிலை அதிபர்)
6. திரு. த.சிற்பரன் (கட்டிடக் கலைஞர்)
7. திரு. க.சிவாஜிலிங்கம் (முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினர்)
8. திரு. க.இரத்தினகுமார் (ஓய்வுநிலை அதிபர்)
9. திருமதி.மீரா அருள்நேசன் (ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்)
10. திரு. சிங்கபாகு சிவகுமார் (ஆயுர்வேத வைத்தியர்)
#தமிழ்மக்கள்தேசியகூட்டணி  #வேட்புமனுத்தாக்கல்  #வி.விக்னேஸ்வரன்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More