Home இலங்கை அரசியல் கைதிகளை விடுவியுங்கள்

அரசியல் கைதிகளை விடுவியுங்கள்

by admin
கொரோனோ ஆபத்திலிருந்து சிறைக்கைதிகளை பாதுகாக்க போதிய முன்னாயத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ள விடுவிக்கப்பட்ட அரசியல் கைதியான மு.கோமகன் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
உலகையே உலுக்கி வரும் கொரோனோ இலங்கையையும் விட்டு வைக்க வில்லை. அதனை கட்டுப்படுத்த எல்லோரும் ஒன்றிணைந்து முயற்சிக்கின்றனர்.
இந்நிலையில் சிறைச்சாலைகள் பெரும் ஆபத்தான நிலையை எதிர்கொண்டு வருகின்றன. புதிதாக கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் எந்தவித உடல் பரிசோதனைகளும் இல்லாமால் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படுகின்றனர். சிறைச்சாலையில் கைதிகளின் சுகாதாரங்கள் உரியமுறையில் பேணப்படவில்லை.
இந்நிலையில்  தமிழ் அரசியல் கைதிகள் பல வருடங்களாக சிறையில் வாடுவதனால் நீரழிவு நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அந்த நோய்களினால் அவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு தமிழ் அரசியல் கைதிகளை பிணையிலையோ , நிபந்தனைகளின் அடிப்படையிலையோ அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். என கோருகின்றோம்.
நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எமது அரசியல் கைதிகளை மரண தண்டனை கைதிகளோட தடுத்து வைத்திருக்கின்றார். இதனால் அவர்கள் உடல் உள ரீதியாக பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளார்கள் எனவே அவர்கள் தொடர்பில் கரிசணை கொண்டு மரண தண்டனை கைதிகளோடு அவர்களை தடுத்து வைக்காது தனியாக தடுத்து வைக்குமாறும் கோரி நிற்கிறோம்.
கொரோனோ தாக்கத்தால் ஈரானில் சிறைக்கைதிகள் பலரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோருகிறோம் என தெரிவித்தார்.  #அரசியல்கைதிகள் #கொரோனோ  #சிறைச்சாலைகள்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More