Home இலங்கை பிலதெனியா தேவாலய ஆராதனையில் கலந்து கொண்டவா்களை உடனடியாக பதிவு செய்யுமாறுகோாிக்கை

பிலதெனியா தேவாலய ஆராதனையில் கலந்து கொண்டவா்களை உடனடியாக பதிவு செய்யுமாறுகோாிக்கை

by admin

யாழ்.செம்மணி- இளையதம்பி வீதியில் உள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த 15ம் திகதி இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டவா்கள் உடனடியாக தங்கள் பெயா், முகவாியை பதிவு செய்யுமாறு மாகாண சுகா தார சேவைகள் பணிப்பாளா் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கோாிக்கை விடுத்துள்ளாா். கடந்த 15ம் திகதி குறித்த தேவாலயத்தில் வெளிநாட்டிலிருந்து  வந்த மதபோதகா் ஒருவாினால் நடத்தப்பட்ட ஆராத னையில் கலந்து கொண்ட இருவா் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். இந்த ஆராதனை நிகழ்வில் வேறு பகுதிகளை சோ்ந்தவா்கள்,

மாவட்டங்களை சோ்ந்தவா்கள் என பலா் கலந்து கொண்டுள்ளனா். இவா்கள் உடனடியாக தமது பெயா் மற்றும் இரு ப்பிட விலாசம் என்பவற்றை 0212217278 என்ற முகவாிக்கு உடனடியாக அறியத்தரவும் என அவா் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கின்றாா்.   #செம்மணி #தேவாலயத்தில்  #ஆராதனை #மதபோதகா்  #வெளிநாட்டிலிருந்து

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More