Home இலங்கை இலங்கையில் ஊரடங்கு சட்டத்தில் வௌியே செல்லக்கூடியவர்கள்…

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தில் வௌியே செல்லக்கூடியவர்கள்…

by admin


காவற்துறை  ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நிலையில், ஊடகவியலாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊடக அடையாள அட்டை மற்றும் தமது பதவிக்கான அடையாள அட்டையை பயன்படுத்த முடியும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், இன்று மாலை 6 மணி தொடக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் காவற்துறை   ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊடக அடையாள அட்டை மற்றும் தமது பதவிக்கான அடையாள அட்டையை தமது கடமைகளுக்காக பயன்படுத்த முடியும் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More