Home உலகம் ஜெர்மனி அதிபர் தன்னைத்தானே தனிமைப்படுத்தியுள்ளார்

ஜெர்மனி அதிபர் தன்னைத்தானே தனிமைப்படுத்தியுள்ளார்

by admin

கொரோனா அச்சம் காரணமாக ஜெர்மனியின் அதிபர் அன்ஜலா மெர்கல் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா வைரசால் ஜெர்மனியில் மொத்தம் 18610 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 2000 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ள நிலையில் வைரஸ் அறிகுறி உள்ளவர்கள், அவர்களுடன் தொடர்பு உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஜெர்மனியின் அதிபர் அன்ஜலா மெர்கல் , கொரோனா அச்சம் காரணமாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி போடப்பட்டது அந்த தடுப்பூசியை செலுத்திய வைத்தியர் கோரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து அவர் இவ்வாறு தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

அவருக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் எனவும், வீட்டில் இருந்தவாறே தனது பணிகளை கவனிப்பார் எனவும் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று கடந்த வாரம் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட துணை அதிபரும் நிதி அமைச்சருமான ஸ்கால்ஸ் மறுநாள் டுவிட்டரில் பரிசோதனையில் தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்திருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது #ஜெர்மனி   #தனிமை #கொரோனா #அன்ஜலாமெர்கல்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More