Home இலங்கை மிருசுவிலில் 8 பேரை கொலை செய்த – மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி விடுதலை

மிருசுவிலில் 8 பேரை கொலை செய்த – மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி விடுதலை

by admin


மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியான சுனில் ரத்நாயக்கவிற்கு நேற்றையதினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ பொது மன்னிப்பு வழங்கியதனையடுத்து அடுத்து அவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி யாழ். மிருசுவில் பகுதியில் 8 பேரை கொலை செய்தமைக்காக சுனில் ரத்நாயக்க உள்ளிட்ட 05 இராணுவ வீரர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதில் நால்வர் அவர்களுக்கெதிரான குற்றச்சாட்டுக்ளுக்கு போதியளவு சாட்சிகள் இல்லாத காரணத்தால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.   #மிருசுவில்  #கொலை #மரணதண்டனை #இராணுவஅதிகாரி  #விடுதலை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More