Home இலங்கை மக்கள் முறைப்பாடுகளுக்காக ஜனாதிபதி அலுவலக பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு 24 மணி நேரமும்  திறந்திருக்கும்

மக்கள் முறைப்பாடுகளுக்காக ஜனாதிபதி அலுவலக பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு 24 மணி நேரமும்  திறந்திருக்கும்

by admin

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு மக்கள் முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவை 24 மணி நேரமும் திறந்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் வழங்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாதிருத்தல் அல்லது மக்கள் அசௌகரியத்திற்குள்ளாகும் வகையில்செயற்படுதல் குறித்த முறைப்பாடுகளை 011-4354550 / 0114354655   என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தெரியப்படுத்த முடியும்.

இந்த தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொள்ள முடியாது போனால் அலுவலகத்தின் நேரடி தொலைபேசி இலக்கமான 0112354354 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு 3872/ 3873/ 3874/ 3875 என்ற தொடர் இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.

மக்கள் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் கபில குணசிங்கவின் (077-3743718) என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

கொரோனா வைரஸ் பரவலுடன் தொடர்பான விடயங்களை தெரியப்படுத்துவதற்காக 0112860003 / 0112860004  என்ற இலக்கங்களை தொடர்புகொள்ள முடியும்.

0112354354 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு 3355 என்ற தொடர் இலக்கத்தின் ஊடாகவும் இந்த தகவல்களை தெரிவிக்க முடியும்.

மக்கள் வழங்கும் தகவல்களை குறித்த துறைகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி   வழங்கும் உத்தரவுகள், பணிப்புரைகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும்  என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது  #முறைப்பாடு  #பொதுமக்கள்  #தொடர்பாடல்  

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More