Home உலகம் ஈரானில் கொரோனா கட்டுப்படுத்துவதற்காக மதுபானம் அருந்திய 300 பேர் பலி

ஈரானில் கொரோனா கட்டுப்படுத்துவதற்காக மதுபானம் அருந்திய 300 பேர் பலி

by admin

ஈரானில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக மெதனால் கலந்த மதுபானத்தினை அருந்திய 300 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸின் தாக்கம் உலகெங்கிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனா, இத்தாலி நாடுகளுக்கு அடுத்தபடியாக கொரோனா இறப்பு சதவிகிதம் ஈரானில் அதிகமாக உள்ளது. அந்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,000 ஆகவும், பலி எண்ணிக்கை 2,200 ஆகவும் உள்ளது.

இந்த நிலையில் கை கழுவுவதற்கு பயன்படுத்தப்படும் சானிட்டைசரில் அல்கஹோலும் இருப்பது தொடர்பான செய்தியை பகிர்ந்து, சில உயர் ரக மதுபானத்தினை  அருந்துவதால் உடலிலுள்ள கொரோனா வைரஸ் கொல்லப்படும் என்ற தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது.

இதனால் ஈரானின் தென்மேற்கு குஜெஸ்தான் மாகாணத்திலும் அதன் தெற்கு நகரமான ஷிராஸிலும் ஏராளமான மக்கள் மெத்தனால் அடங்கிய மதுபானத்தினைக் குடித்துள்ளனர்.  கொரோனா வைரஸ் குறித்த பயம் காரணமாகவும், சமூக வலைதளங்களில் பரவும் வதந்தி காரணமாகவும் போதிய படிப்பறிவு இல்லாததாலும், மதுபானம் குடித்தால் கொரோனாவால் பாதிக்கப்பட மாட்டோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் குடித்துள்ளனர்.

மெதனால் கலந்த மதுபானத்தினை அருந்தியதால் இதுவரை ஈரானில் 300 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், 1000 பேர் வரை நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மற்ற நாடுகளுக்கு கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்னும் ஒரே ஒரு பிரச்சினைதான் இருப்பதாகக் குறிப்பிடும் ஈரான் சுகாதாரத் துறை ஆலோசகர் ஹோசின் ஹசானியன், ‘நாங்கள் இரண்டு பிரச்சினைகளை எதிர்த்துப் போராடி வருகிறோம். ஓன்று கொரோனா வைரஸுடன் போராட வேண்டும். இரண்டாவதாக அல்கஹோல் விஷத்தால் பாதிக்கப்பட்ட மக்களை குணப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.  #ஈரான்  #கொரோனா  #மதுபானம் #பலி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More