Home இலங்கை சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் உள்பட நால்வர் கைது

சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் உள்பட நால்வர் கைது

by admin


கொடிகாமம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட வரணிப் பகுதியில் ஊரடங்கு நேரத்தில் நடமாடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஒருவர் உள்பட நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த வாகனமும் காவல்துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை வரணிப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வசதி குறைந்த குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்க முற்பட்ட சமயமே இவர்கள் கொடிகாமம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஒருவரும், அவர் சார்ந்த கட்சியின் ஆதரவாளர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

கைது செய்யப்பட்ட வேளையில், சாவகச்சேரிப் பகுதியில் உணவுப் பொருள்களை விநியோகிப்பதற்காக சாவகச்சேரி காவல்துறையினரால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் அவர்களிடம் இருந்த போதிலும், கொடிகாமம் காவல்துறைப்பிரிவினுள் ஊரடங்கு வேளையில் நடமாடுவதற்கான அனுமதிப்பத்திரம் எதனையும் அவர்கள் வைத்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது.  #சாவகச்சேரி  #நகரசபைஉறுப்பினர்   #கைது  #உலருணவுப்பொதிகள் #ஊரடங்கு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More