Home இலங்கை இந்தியாவிலிருந்து வந்த நால்வருக்கு கொரோனா

இந்தியாவிலிருந்து வந்த நால்வருக்கு கொரோனா

by admin

இலங்கையில் நேற்றையதினம் புதிததாகக் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றுள்ளானவர்களில் நால்வர் அண்மையில் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்மையில் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய அனைவரையும் உடனடியாக அடையாளம் காணுமாறு சுகாதார அமைச்சு அறிவுறத்தியுள்ளது.

இதனையடுத்து கடந்த 14.03.2020 திகதி அல்லது அதன்பின் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் அனைவரும் உடனடியாக 021 221 7278 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

மேலும் இவ்வாறு நாடு திரும்பிய அனைவரும் உடனடியாக தம்மைத் தத்தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதுடன் காய்ச்சல், தொண்டை நோ மற்றும் வரட்டு இருமல் போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரச வைத்தியசாலையை அணுகுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  #இந்தியா கொரோனா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More