Home இந்தியா இந்தியாவில் 4,067 பேருக்கு கொரோனா தொற்று – உயிரிழப்பு 109 ஆக உயர்வு

இந்தியாவில் 4,067 பேருக்கு கொரோனா தொற்று – உயிரிழப்பு 109 ஆக உயர்வு

by admin

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூக தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் இன்று இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,067 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளதுடன் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 292 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 690 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை தமிழ்நாட்டில் 571 பேரும் டெல்லியில் 503 பேரும் கேரளாவில் 314 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #இந்தியா #கொரோனா  #ஊரடங்கு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More