Home இலங்கை பாடசாலைகளில் கடற்படை முகாம் ?

பாடசாலைகளில் கடற்படை முகாம் ?

by admin

இந்தியாவிலிருந்து கடற்பரப்புகள் ஊடாக யாழ்ப்பாணக் குடாநாட்டு போதைப்போருள்கள் கடத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கு மேலதிக துருப்புக்களைத் தங்க வைப்பதற்கு கடற்படையினரால் கோரப்பட்டதற்கு அமைய மாதகல் நுணசை வித்தியாலயம் வழங்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாதகல் நுணசை வித்தியாலயத்துக்கு இன்று புதன்கிழமை கடற்படையினர் அழைத்துவரப்பட்டனர். அதனால் பாடசாலையைச் சூழவுள்ள மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் தொடர்பான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படப்போவதாக அந்தப் பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டனர். மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள பாடசாலையில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படுவது தடுக்கப்படவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதுதொடர்பில் சம்பவ இடத்துக்குச் சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ், தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்தியாவிலிருந்து கடற்பரப்புகள் ஊடாக யாழ்ப்பாணக் குடாநாட்டு போதைப்  பொருள்கள் கடத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கு மேலதிக துருப்புக்களைத் தங்க வைப்பதற்கு கடற்படையினரால் கோரப்பட்டதற்கு அமைய மாதகல் நுணசை வித்தியாலயம் வழங்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பாடசாலைகளும் மாதகலில் ஒரு பாடசாலையும் இவ்வாறு விமானப் படை மற்றும் கடற்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  #பாடசாலை  #கடற்படைமுகாம்   #வடக்குமாகாண  #முல்லைத்தீவு  #மாதகல்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More