Home உலகம் பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 873 பேர் மரணம் – நேற்றைய இறப்பின் இரு மடங்கு…

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 873 பேர் மரணம் – நேற்றைய இறப்பின் இரு மடங்கு…

by admin

 
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவ மனைகளில் 873 மரணங்கள் பதிவாகி உள்ளதாக தேசிய சுகாதார சேவை அறிவித்துள்ளது. இந்தப் புதிய இறப்புகளுடன் பிரித்தானியாவின் மொத்த இறப்புகள் 17,408 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய மரணங்களின் பதிவானது, நேற்றைய 449 இறப்புகளின் இரு மடங்காகும். இதேவேளை நேற்று பதிவுசெய்யப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை குறைவானதாக இருக்கலாம் எனவும், வார இறுதியில் மேற்கொள்ளப்பட்ட இறப்புகளின் பதிவில் தாமதம் ஏற்பட்டு இருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் இறப்புக்களின் புள்ளிவிவரங்கள் திங்களன்று குறைவாக இருந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேவேளை இங்கிலாந்தில் 778 பேரும், ஸ்கொட்லாந்தில் 70 பேரும், வேல்ஸில் 25 பேரும் பலியாகி உள்ளதாகவும், வடக்கு அயர்லாந்து தனது புதிய இறப்பு எண்ணிக்கையை இன்னும் வெளியிடவில்லை எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் நேற்றைய நிலவரப்படி, இதுவரை பிராந்தியங்கள் சுயமாக வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, இங்கிலாந்தில் 15,607, ஸ்கொட்லாந்தில் 985, வேல்ஸில் 609, மற்றும் வடக்கு அயர்லாந்தில் 207 பேர் மரணித்துள்ளதாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது.  #பிரித்தானியா #மரணம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More