Home இலங்கை12 சுகாதார வைத்திய அதிகாரிகள் – பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கடமையிலிருந்து விலக தீர்மானம்

12 சுகாதார வைத்திய அதிகாரிகள் – பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கடமையிலிருந்து விலக தீர்மானம்

by admin


கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட மத்திய கொழும்பு பகுதியில், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட 12 பேர் கடமையிலிருந்து விலகி, 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தலில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்துமாறு அதிகாரிகளிடம் கோரியபோதும் அவர்கள் அதனை நிராகரித்தமையால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

கொழும்பு நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா ஒழிப்பு செயற்பாட்டில் ஈடுபட்டமையால், அவர்கள் தங்களை பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது #வைத்தியஅதிகாரிகள்  #சுகாதாரப்பரிசோதகர்கள்   #விலக

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More