Home இலங்கை கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 915ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 915ஆக அதிகரிப்பு

by admin

இலங்கையில் மேலும் 22 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 915 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 382 பேர் பூரணகுணமடைந்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை நேற்றையதினம் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட 26 பேரும் வெலிசர கடற்படை முகாமைச் சேந்தவர்கள் என தெரிவித்துள்ள இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதுவரை இனங்காணப்பட்ட 915 தொற்றாளர்களில் 498 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களென தெரிவித்துள்ளார்.

மேலும் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் அம்மாவட்டத்தில் 150 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #கொரோனா  #சவேந்திரசில்வா #வெலிசர

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More