Home இலங்கை முள்ளிவாய்க்கால் சென்ற விக்கி திருப்பி அனுப்பப்பட்டார்

முள்ளிவாய்க்கால் சென்ற விக்கி திருப்பி அனுப்பப்பட்டார்

by admin
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த சென்ற வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இராணுவத்தால் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக , யாழில் இருந்து இன்று காலை முல்லைத்தீவு செல்வதற்காக  யாழ்.மன்னார் வீதியூடாக  பயணித்த போது , சங்குப்பிட்டி பாலத்திற்கு சற்று தொலைவில் உள்ள கேரதீவு இராணுவ சோதனை சாவடியில் வழிமறிக்கப்பட்டார்
சங்குப்பிட்டி, கேரதீவில் உள்ள இராணுவ சோதனை சாவடியில் வைத்து மறிக்கப்பட்ட அவர் சுமார் அரை மணி நேரமாக அங்கு தடுத்து வைக்கப்பட்டர். இதன் பின் அவர் முள்ளிவாய்க்கால் செல்லதற்க்கு அனுமதி மறுக்கப்பட்டு மீண்டும் திருப்பி யாழ்ப்பாணத்திற்க்கு அனுப்பப்பட்டுள்ளார். #முள்ளிவாய்க்கால் #விக்னேஸ்வரன்  #அஞ்சலி

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.