Home இலங்கை 276 கடற்படையினர் வவுனியா தனிமைப்படுத்தல் முகாங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

276 கடற்படையினர் வவுனியா தனிமைப்படுத்தல் முகாங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

by admin


வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 276 கடற்படை  சிப்பாய்கள்  தனிமைப்படுத்துவதற்காக வவுனியா பம்பைமடு மற்றும் பெரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.  நேற்றிரவு 17 பேருந்துகளில் குறித்த 276 கடற்படையினரும் அழைத்து செல்லப்பட்டு வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் இராணுவ முகாமில் 174 கடற்படையினரும், வவுனியா பெரியகட்டு கடற்படை முகாமில் 102 கடற்படையினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 500 இற்கு மேற்பட்ட கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அம் முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் பலர் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த கடற்படையினரை அழைத்துச் சென்ற பேருந்துகளை வவுனியாவில் ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்த போது கடற்படையினருக்கும் ஊடகவியலாளருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தலையிட்டு சமரப்படுத்தி வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #கடற்படை  #வவுனியா  #தனிமைப்படுத்தல்  #கொரோனா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More