Home இலங்கை இழப்பீடு வழங்க நடவடிக்கை

இழப்பீடு வழங்க நடவடிக்கை

by admin

யாழ்.மாவட்டத்தில்  காற்றினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு இழப்பீடுகள் வழங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.    யாழில் கடந்த தினங்களில் வீசிய கடும் காற்றினால்,  79 வீடுகள் சேதமடைந்துள்ளன.  அவற்றில் ஒரு வீடு முழுமையாகவும் ஏனைய  78 வீடுகளும் பகுதியளவிலும் சேதமடைந்திருக்கின்றன.

அதேவேளை  204 குடும்பங்களைச் சேர்ந்த 658 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கைதடி கலை வாணி வித்தியாலய பாடசாலை கட்டடம் ஒன்றும் சேதத்திற்குள்ளாகியுள்ளதாக எமக்கு அறியத்தரப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காற்றின் காரணமாக மரம் ஒன்று முறிந்து வீழ்ந்து கடற்தொழிலாளி ஒருவரின் படகு சேதமடைந்துள்ளது.

அத்துடன் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகளவில் வாழை செய்கை மற்றும் பப்பாசி செய்கை பாதிப்படைந்துள்ளன. அந்நிலையில் தற்போது  வீடுகள் பாதிப்படைந்தவர்களுக்கு,  இழப்பீடு வழங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். அத்துடன் தொழில் முயற்சி பாதிக்கப்பட்ட சிறு முயற்சியாளர்களுக்கும் இழப்பீடு வழங்குவதற்குரிய முயற்சிகளையும் எடுத்துள்ளோம் என தெரிவித்தார். #யாழ்  #இழப்பீடு  #காற்றினால்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More